அமைச்சராக பதவியேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!!

19

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா அமைச்சராக பதவியேற்றுள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த பந்துவீச்சாளரான அசோக் திண்டா 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார்.

மேலும், ஐபிஎல் தொடரில், கொல்கத்தா, டெல்லி, புனே, பெங்களூரு ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2021 ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், அதன் பின்னர் பாஜகவில் இனைந்து அரசியலில் நுழைந்தார்.

2021 மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மய்னா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அசோக் திண்டா, 1,260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2026 மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில், அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்க நிலையில், 16,241 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் பாஜக 208 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், சுவேந்து அதிகாரி மேற்குவங்க முதலமைச்சராக பதவியேற்றார். நேற்று, நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் அசோக் திண்டா அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.