வவுனியா சூசைபிள்ளையார்குளத்தில் அமைந்துள்ள சகாயமாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கூடுதூக்கும் நிகழ்வு இன்று (24.09) காலை ஒன்பது மணியளவில் இடம்பெற்றது.
மேற்படி சகாய மாதா திருச்சொரூபம் தாங்கிய கூடு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முதலாம் குறுக்குதெரு சந்தியை பக்தர்களின் புனித யாத்திரை சகிதம் சென்றடைந்து. பின்னர் இரண்டாம் குறுக்கு தெரு சந்தி வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
மேற்படி திருவிழாவில் நூற்றுக்கணக்கான கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
-பண்டிதர்-