வீட்டிலிருந்து புறப்பட்ட இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!!

191

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (16.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடமைக்காக பாண்டிருப்பில் அமைந்துள்ள தனது இல்லத்திலிருந்து களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர், களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்த மட்டக்களப்பு நாவற்குடா, இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்த ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். திருமணத்தின் பின்னர் அவர் பாண்டிருப்பில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.