வவுனியாவில் சித்திரவதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்பாடு!!

23

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினமான ஜூன் 26 ஆம் திகதியை முன்னிட்டு, சித்திரவதைகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று வவுனியாவில் நடைபெற்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தினால், ‘தேசிய தடுப்பு பொறிமுறை’ (National Preventive Mechanism – NPM) நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமால் ஜி.புஞ்சிஹேவா, சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் கபிலன் வில்லவராஜன் மற்றும் சட்ட அலுவலர் கலிஸ்டர் அருணஸ்ரீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

மேலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று காவல் துறை அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் பல துறை சார்ந்த பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். சித்திரவதைகளைத் தடுப்பது மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துவது குறித்தும் இதன்போது கவனஞ்செலுத்தப்பட்டது.