
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (29.07.2026) காலை இடம்பெற்ற விபத்தில் 64 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனகராயன்குளத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமாரன் (64) என்பவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்திசையில் வந்த கப் (Cab) ரக வாகனம் மோதியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்திற்குப் பின்னர் குறித்த கப் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிவராசா உதயகுமாரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தப்பிச் சென்ற வாகனத்தையும் அதன் சாரதியையும் கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





