நாளை 5ம் தரப் புலமைப் பரிசில் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளது!!

1030

grade-5-exam-results

இவ்வருடத்திற்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இதற்கான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறித்த பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.

கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்காக மூன்று இலட்சத்து 35,585 மாணவர்கள் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.