வவுனியா கற்பகபுரத்தில் கிராமசேவகரை தாக்கியதாக பொய் கூறி கைது செய்தவரை விடுவியுங்கள் : கற்பகபுரம் மக்கள் ஆர்பாட்டம்!!

257

Vavuni

வவுனியா கற்பகபுரத்தில் கிராமசேவகரை தாக்கியதாக பொய்கூறி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரையும் விடுவிக்ககோரி கிராம மக்கள் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இன்று (1.10) ஈடுபட்டனர்.

கற்பகபுரத்தை சேர்ந்த இருவரை கிராம சேவகர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று வவுனியா பொலிஸார் கைது செய்திருந்த நிலையில் அவ் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் இருவரும் கிராம சேவகரை தாக்கவில்லை எனவும் தெரிவித்து கற்பகபுரம் கிராம மக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்கரர்கள் ஐவரை அழைத்த வவுனியா அரசாங்க அதிபர் விபரங்களை அறிந்ததுடன் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறும் தான் ஆவன செய்வதாகவும் தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.