மீள் குடியேற்ற கிராமமான ஓமந்தை வேப்பங்குளத்தில் இளங்கதிர் முன் பள்ளியில் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர் தினம் அனுஷ்டிக்க பட்டது .
முன் பள்ளி ஆசிரியை செல்வி வே.ரேணுகா தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட மீள் எழுச்சி திட்ட பிரதி திட்ட பணிப்பாளர் டி.எ.டி .ரஞ்சித் .தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) செயலாளர் மாணிக்கம் ஜெகன் ,வேப்பங்குளம் மீள் எழுச்சி திட்ட தலைவி திருமதி சி.சுபாசினி, மாதர் சங்க தலைவி யோ.நேசமணி, செயலாளர் த.தனலெட்சுமி உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.










