
பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தைச் சேர்ந்த 27வயது இளைஞன் ஒருவர் கொழும்பு புறக்கோட்டை மேசஞ்சர் வீதி பகுதியில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை 05.30 மணியளவில் இடம் பெற்றதாக சேசல்வத்த பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தைச் சேர்ந்த 27வயதான செல்லப்பன் பாலகுமார் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் கொழும்பு புறக்கோட்டை மேசஞ்சர் வீதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வந்ததாக தெரிவித்த பொலிஸார் இந்த சம்பவம் கொலையா, அல்லது தற்கொலையா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





