புத்தளம் பொலிஸ் பிரிவின் மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மீது மதுரங்குளி – ஜயசிறிகம பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று முற்பகலில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் சம்பவத்தில் மோசடி தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகரான நசீம் சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அத்துடன் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த பொலிஸ் அதிகாரிகள் ஜயசிறிகம பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபடும் பெண்ணொருவரை கைது செய்ய சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கசிப்பு விற்பனையில் ஈடுபடும் பெண்ணின் மகள் மோசடி தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகரின் கையை கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார்.
அத்துடன் அவருடன் சென்றிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிகளில் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். மோட்டார் சைக்களில் மோதிய இளைஞர் சந்தேக நபரான பெண்ணின் மகன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உப பொலிஸ் பரிசோதகரை கடித்து காயப்படுத்திய 25 வயதான யுவதி மற்றும் அவரது தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தப்பிச் சென்றுள்ள இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றனர். முந்தல் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.