ரயில்வே ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பினால் வெறிச்சோடிய ரயில் நிலையங்கள்!!

488

சம்பள முரண்பாடுகளை உட்பட சில கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாட்டின் சகல ரயில் நிலையங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கொழும்பு கோட்டை, மருதானை, கண்டி, காலி, ஹற்றன் உட்பட நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

எனினும் சில ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அது பொதுமக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அலுவலக ரயில் இன்று காலை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இடநெரிசல் காரணமாக பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கொழும்புக்கு வரும் பிரதான வீதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அனைத்து ரயில் நிலையங்களில் சன நடமாட்டமற்று வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

1 2 3 4 5