வவுனியா புளியங்குளத்தில் புராதனப் பொருட்களுடன் இருவர் கைது!!

434

A6

புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் சிலவற்றை கனடாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்த இருவர் வவுனியா – புளியங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றை புளியங்குளம் பகுதியில் வைத்து வழிமறித்த பெரியமடு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை செய்துள்ளனர்.

அதன்போது குறித்த முச்சக்கர வண்டியில் இருந்து 5 சங்குகள் உள்ளிட்ட புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புராதன பொருட்களுடன் புளியங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.