வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் மீது கொலை முயற்சி தாக்குதல்!

575

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் மீதான தாக்குதல் கொலை முயற்சியே என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை வவுனியா பிரஜைகள் குழு நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் பிரஜைகள் குழுவின் தலைவரை ‘போராட்டத்திற்கு செல்வாயா’ எனக் கேட்டு இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிரஜைகள் குழுவின் தலைவரான கி.தேவராசாவைத் தாக்கிய பின்னர் அவரை வயல்வெளியொன்றுக்குள் இழுத்துச் சென்றுள்ளனர். அந்த வீதியூடாக வேறு வாகனம் வந்ததால் தாக்குதலாளிகள் தப்பியோடியுள்ளனர். எனவே இது அவரை கொலை செய்வதற்கான முயற்சியாகவே பார்க்கவேண்டியுள்ளது.

இச் சம்பவத்தை கேள்வியுற்றதையடுத்து நெடுங்கேணி வைத்தியசாலைக்கு நானும் வட மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனும் சென்று அவரைப் பார்வையிட்டோம். அவரை பரிசோதித்த வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளமையால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

இடன்படி பிரஜைகள் குழுவின் தலைவர் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

-நன்றி மலரும் இணையம்-

11 12 13