வவுனியா கனகராயன்குளம் பெரியகுளத்தில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய தமிழ் விருட்சம் அமைப்பு!!

424

வவுனியா கனகராயன்குளம் பெரியகுளத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் சர்மிளாவின் வேண்டுகோளுக்கு அமைவாக வறிய 41 மாணவர்களுக்கு தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்க பட்டன .

பெரியகுளம் பொது நோக்கு மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) செயலாளர் கவிஞர் மாணிக்கம் ஜெகன், சமுர்த்தி உத்தியோகத்தர் சர்மிளா உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்

நிகழ்வில் உரையாற்றிய மாணிக்கம் ஜெகன் அவர்கள் மாணவ செல்வங்களே கல்வியே எம் இனத்தின் விடிவு காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறி வரும் இவ் வேளையில் நீங்களும் நன்றாக கற்று நல்ல நிலைக்கு வருவதுடன் நல்ல பிரஜை ஆகவும் இதே போல் இன்னொருவருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் வர வேண்டும் எண்டு கேட்டு கொண்டார் .

பின்னர் கற்றல் உபகரணங்கள் ஆண்டு 1 தொடக்கம் உயர்தரம் வரை கற்கும் 41 மாணவர்களுக்கு வழங்கி வைக்க பட்டன. இறுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர் சர்மிளாவின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

DSC06685 DSC06688 DSC06689 DSC06691 DSC06692 DSC06693 DSC06694 DSC06697 DSC06698 DSC06699 DSC06700 DSC06701