கொத்மலையில் 9 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கொத்மலை கட்டுக்கிதுல, ஹெல்பொடகம பிரதேசத்தில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் வீட்டின் கூரை வழியாக, வீட்டிற்குள் இறங்கிய நபரொருவர் 9 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
அதன் போது சிறுமியின் சத்தம் கேட்டு, நித்திரையில் இருந்த உறவினர்கள் எழும்பியதும் சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார்.
தரம் 4 இல் கல்வி பயிலும் சமோதியா விதுமி சந்தன என்ற சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். உறவினர்கள் பொலிஸாருக்கு கொடுத்த அவரச அழைப்பினையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பப் பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.