இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை பாதியிலேயே ரத்து செய்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையிடம் இருந்து 400 கோடி இழப்பீடு கோர பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஹைதராபாதில் இன்று நடைபெறும் பிசிசிஐ செயற்குழுவில் முடிவெடுக்கப் படவுள்ளது.
இந்திய அணியுடன் 5 ஒருநாள் போட்டி, ஒரு T20, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு வந்திருந்தது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களின் ஊதியத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை திடீரென குறைத்ததால் அவர்கள் விளையாட மறுத்துவிட்டனர். இதையடுத்து தர்மசாலாவில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியோடு தொடர் ரத்து செய்யப்பட்டது.
இதனால் கடைசி ஒருநாள் போட்டி, ஒரு T20, 3 டெஸ்ட் போட்டி என மொத்தம் 17 நாள் போட்டி நடைபெறவில்லை. எனினும் இந்தியா-இலங்கை இடை யிலான 5 ஒருநாள் போட்டி யின் மூலம் 5 நாட்கள் ஈடுகட்டப் பட்டாலும், எஞ்சிய 12 நாட்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளை யாடியபோது ஒரு போட்டியின் மூலம் 33 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதை அடிப்படை யாகக் கொண்டு 12 நாள் வரு வாய் இழப்பாக 396 கோடி கணக்கிடப்பட்டுள்ளது.