பொதுவுடைமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடி என அழைக்கப்படும் கே.ஏ.சுப்ரமணியத்தின் 25வது ஆண்டு நினைவுக் கூட்டம் வரும் 29.11.2014 சனிகிழமை பிற்பகல் 4.00 மணியளவில் கொழும்பு 6 இல் அமைந்துள்ள தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இன் நிகழ்விற்கு முனைவர் சி.சிவசேகரம் தலைமை தாங்கவுள்ளதுடன் வரவேற்புரையை சோ.தேவராஜா அவர்களும், நூல் ஆய்வுரையை சிவ.ராஜேந்திரன் (பிடாதிபதி, மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரி) அவர்களும் ஏற்புரையை சி.கா.செந்திவேல் அவர்களும், நினைவுப் பேருரையை பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.
இன் நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு தோழர் கே.ஏ.சுப்ரமணியம் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுகின்றனர்.