குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்ய முயற்சித்த தந்தை!!

545

Baby

மன்னார் மடு பிரதேசத்தில் குழந்தைக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபர் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஷம் கொடுக்கப்பட்ட குழந்தை பெரிய பண்டிவிரிச்சான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளது.

ஒன்றரை வயதான குழந்தையே இவ்வாறு உயரிழந்துள்ளது. விஷம் அருந்தியவர் குழந்தையின் தந்தை எனவும் அவர் பெரிய பண்டிவிரிச்சான் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



இறந்து போன குழந்தையின் தாய் சில மாதங்களுக்கு முன்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தந்தை குழந்தைக்கு விஷத்தை கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சம்பவம் குறித்து மடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.