திருகோணமலையி குழியினுள் விழுந்து இரு குழந்தைகள் பரிதாப மரணம்!!

462

borewell-hole

திருகோணமலை வெருகல் துறைமுகத்துவாரம் பகுதியில் குழி ஒன்றினுள் விழுந்து இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வயதான பெண் குழந்தை ஒன்றும், இரண்டரை வயதான ஆண் குழந்தை ஒன்றுமே குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தைகள் இருவரும் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது சுமார் மூன்று அடி ஆழமுள்ள குழிக்குள் இன்று காலை எட்டு மணியளவில் விழுந்துள்ளனர்.



குழியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் சடலங்கள் ஈச்சிலம்பற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இது குறித்த மேலதிக தகவல்களை சேருநுவர பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.