உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும் : பரீட்சைகள் திணைக்களம்!!

500

exam

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

புள்ளிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.



இதே வேளை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.