நீர் கட்டணம் செலுத்தாமல் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் திட்டம் இன்று (06.12) தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என நீர்வள மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று தொடக்கம் ஜனவரி 15ம் திகதிவரை நீர் விநியோகம் தடை செய்யப்பட மாட்டாதென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
க.பொ.த சா.த பரீட்சை மற்றும் சர்வ மத உற்சவங்கள் இக்காலத்தில் நடைபெறவுள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இது குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






