வவுனியா பாவற்குளம் நீர் மட்டம் அதிகரிப்பு காரணமாக இரு வான் கதவுகள் திறப்பு!!

678

வவுனியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளம் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பாவற்குளம் குளத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியா, பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்த நிலையில் இரு வான் கதவுகள் இன்று நீர்பாசன திணைக்களத்தினரால் திறக்கப்பட்டது.

வவுனியாவில் தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது. இம் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் 20.1 அடியாக உயர்ந்தது. குளத்தின் நீர்மட்டம் 19.4 ஐ தண்டியதால் இன்றைய தினம் குளத்தின் இரு வான்கதவுகள் ஒரு அடி திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக கந்தசாமி நகர், மீடியாபாம், கன்னாட்டி உள்ளிட்ட மக்கள் தமது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். நெளுக்குளம் – செட்டிகுளம், பூவரசன் குளம் – செட்டிகுளம் போக்குவரத்து பாதையும் முழுமையாக தடைப்பட்டுள்ளது.

v v1 v2 v3