பாப்பரசரை வழியனுப்பி வைத்தார் ஜனாதிபதி மைத்திரி!!

627

Goodbye-Holy-Father

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை இன்று காலை 9.10 மணியளவில் விசேட விமானம் ஒன்றில் பிலிபைன்ஸ் நோக்கி பயணமானார்.

பரிசுத்த பாப்பரசரை வழியனுப்பி வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால, அமைச்சர்கள், ஆயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத்தந்திருந்தனர்.

பாப்பரசரின் இலங்கை விஜயத்தின் போது காலி முகத்திடலில் இடம்பெற்ற விசேட ஆராதனை, ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக திருநிலைப்படுத்துதல் மற்றும் மடு தேவாலயத்துக்கு விஜயம் என்பவை மிகவும் முக்கிய பிரதானமான விடயங்களாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.