யாழில் நீருக்குள் தலைகீழாக குதித்தவர் நீரில் மூழ்கி மரணம்!!

878

Jaff

யாழ். நாவற்குழி பாலத்துக்கு அருகில் உள்ள கடல்நீரேரியில் நீராடிய இளைஞன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

யாழ். அரியாலை பகுதியை சேர்ந்த வி.விஜேந்திரராஜ் (23) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

நண்பர்களுடன் கடல்நீரேரியில் நீராடச் சென்ற குறித்த இளைஞன் பாலத்துக்கு அருகில் இருந்த துருசு மேல் ஏறி நீரினுள் தலைகீழாக குதித்துள்ளார்.

அதன் போது நீருக்கு அடியில் இருந்த சேற்றுக்குள் புதையுண்டதால் நீருக்கு மேல் வரமுடியாததால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கடல்நீரேரியில் இருந்து மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.