உயர் தரத்தில் கற்கை நெறியைத் தொடர்பவர்களுக்கு க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் கணிதப் பாடம் கட்டாயமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கடந்த அரசாங்கத்தினால் அறிமுகம் செய்த, இரண்டு வருடங்களுக்கு கணிதப் பாடம் கட்டாயமில்லை என்ற விதி செல்லுபடியற்றதாகும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
க.பொ.த உயர்தரத்தில் கலை மற்றும் வர்த்தகப் பிரிவில் கல்வியைத் தொடர உள்ளவர்களே கட்டாயம் கணித பாடத்தில் சித்தியடைய வேண்டும்






