இன்று (30.01) 3.40 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்னால் உள்ள புகையிரதக் கடவை உடைந்து விழுந்தமையால் பாரிய வாகன நெரிசல் நிலவியது. இதனால் வீதியைக் கடப்பதில் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கினர்
இதற்கு முன்னரும் இக் கடவை பல தடவைகள் உடைந்து விழுந்தமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன். பொதுமக்கள் வீதியைக் கடப்பதில் சிரமங்களுக்கு முகம்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
-பாஸ்கரன் கதீசன்-