வவுனியா இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று (30.01.2015) கல்லூரி மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி.ஜீ.நடராஜா தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.ஆ.நவரத்தினராசா (செயலாளர்-அருள்மிகு அகிலாண்டேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி ஆலயம்) அவர்களும், திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்) (நகரசபையின் முன்னாள் உப நகரபிதா) அவர்களும், திரு. ஏ.எம்.ஜனாப்.சுபைர் (உடற்கல்வி- உதவிப் பணிப்பாளர்) அவர்களும், திரு.செ.அன்னலிங்கம் (உரிமையாளர் குகன் -மோட்டர்ஸ்), கௌரவ விருந்தினராக திரு.ப.சிவகெங்காதரன்(பழைய மாணவர், ரேஸ்ரி கூல்பார் உரிமையாளர்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.