பேஸ்புக்கில் தனது, புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சின்னத்திரை நடிகை லாவண்யா புகார் அளித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த லாவண்யா என்பவர், சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து வருகிறார். இவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அவர் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதுபற்றி லாவண்யா கூறியதாவது, பேஸ்புக்கில் உள்ள ஒரு ஆபாச தளத்தில் என் புகைப்படம் ஆபாசமாக வெளியிடப்பட்டு இருந்தது.
குடும்ப நண்பர் ஒருவர் இதை பார்த்து, கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் திகதி தெரிவித்தார். மனமுடைந்த நான் தற்கொலைக்கு முயன்றேன். கணவர் தடுத்து, எனக்கு ஆறுதல் கூறினார். அடுத்த நாள் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தோம். 3 நாட்களில் அந்த ஆபாச பக்கம் முடக்கப்பட்டது.
இந்நிலையில், பேஸ்புக்கில் இன்னொரு ஆபாச தளத்தின் முகப்பு பக்கத்தில் என் புகைப்படம் ஆபாசமாக வெளியிடப்பட்டிருப்பதாக குடும்ப நண்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு கடந்த 29ம் திகதி தெரிவித்தார்.
பிறகு, நானும் அந்த பக்கத்தை பார்த்தேன். அந்த புகைப்படத்துக்கு பல ஆபாச கமென்ட்கள், லைக்குகள் வந்துள்ளன. இதனால் மனமுடைந்து மீண்டும் தற்கொலைக்கு முயன்றேன், கணவர் தடுத்துவிட்டார். எனக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது. கணவர் நல்லவர் என்பதால், என்னை அவர் சந்தேகப்படவில்லை.
என் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட பேஸ்புக் பக்கத்தை முடக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.