மனசாட்சி இருந்தால் இப்படி செய்யாதீர்கள் : ஸ்ரேயா கோபம்!!

1450

sreya

சிவாஜி, மழை போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா. ஆனால், இவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் அனைத்து தோல்வியடைய இவரின் படவாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இவரின் பெயரில் ஒரு போலி டுவிட்டர் பக்கத்தை ஆரம்பித்து சிலர் தவறான கருத்தை தெரிவித்து வருகின்றனர்.இதை அறிந்த இவர் தயவு செய்து இது போல் செய்யாதீர்கள், தனி மனிதர் ஒருவரை போலியாக பயன்படுத்தாதீர்கள், உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்று கோபமாக கூறியுள்ளார்.