வட மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக ஏ.பத்திநாதன் இன்றைய தினம் தனது கடமைகளை திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆட்சியமைத்ததன் பின்னர் வடமாகாணத்திற்கான ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பேசி நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் உத்தியோகபூர்வமாக தங்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றனர்.
ஆளுநர் பலியகார காலை 9.20 மணிக்கு யாழ்.பழைய பூங்கா வளாகத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் காலை 10.20 மணியளவில் பிரதம செயலாளராக பத்திநாதன் யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.