சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.
பிரதானமான 28 வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து வரும் 75 வயதுக்கும் அதிகமான கைதிகளைத் தவிர்ந்த ஏனைய சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச் செயல்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் 75 வயதுக்கும் அதிகமான கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
அபராதப் பணத்தை செலுத்த முடியாது தண்டனை அனுபவித்து வரும் கைதிகளும் நாளை விடுவிக்கப்பட உள்ளனர்.
மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது தண்டனை அனுபவித்து வரும் சகல கைதிகளினதும் தண்டனை காலத்தில் ஒரு வார காலத் தண்டனை குறைப்பினை மேற்கொள்ள சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.