யுவதியை கொலை செய்து தண்டவாளத்தில் தலைவைத்து சந்தேகநபர் தற்கொலை!!

480

track

27 வயது திருமணம் முடித்த யுவதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து நபர் ஒருவர் ரயிலில் மோதுண்டு தற்கொலை செய்து கொள்ளப்பட்ட சம்பவம் குறித்து காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காலி, தடுல்ல, மஹமுதலி பகுதியில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த யுவதியின் கணவரது சிறிய தந்தையே இவ்வாறு கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கிங்தொட்ட பாலத்திற்கு அருகில் ரயில் பாதையில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தலை பகுதியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலின் போது யுவதியின் மூத்த சகோதரர் மற்றும் தாய் காயமடைந்துள்ளதுடன் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.