வவுனியா விளக்கமறியல் இருந்த 7 பேர் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை!!

369

Jail

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலுமுள்ள சிறைக்கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் சுமார் 491 சிறைக்கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 கைதிகள் இன்று புதன்கிழமை விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

நாடுபூராகவும் சிறு குற்றங்கள் புரிந்தவர்கள், தண்டப்பணம் செலுத்த முடியாதவர்கள் என்ற அடிப்படையில் கைதிகள் விடுதலைச் செய்யப்படும் நிலையில் வவுயியாவிலிருந்தும் 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட கைதிகளை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்ததுடன், வெளியில் சென்று நல்ல பிரஜைகளாக வாழவேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர்.