உலகத் தமிழ் இணைய மாநாடு இம்முறை சிங்கப்பூரில்!!

408

Singapore

14 வது உலகத் தமிழ் இணைய மாநாடு எதிர்வரும் மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை 3 நாட்கள் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலுமிருந்து 500 க்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி வல்லுநர்கள் வருகை தர உள்ளனர்.

´உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம்´ என்ற அமைப்பு உலகின் பல நாடுகளில் அரசுடனும் பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து இந்த தமிழ் இணைய மாநாட்டை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்தியா, மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்க் கணினி வல்லுநர்கள் கலந்துகொண்டு இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்பிக்கின்றனர்.

சிறப்பு அமர்வுகளில் கணினி வல்லுநர்கள், இணையம், கையடக்க தொலைபேசி கருவிகளில் தமிழின் பயன்பாடு பற்றி சிறப்பு கருத்தரங்குகள் நடத்த உள்ளனர்.

-தினத்தந்தி-