இலங்கை அணி உலகக்கிண்ணத்தை வென்றால் அதிரடி பரிசுத் தொகை அறிவிப்பு!!

540

SL

உலகக்கிண்ணத்தை இலங்கை அணி வென்றால் 6 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி வருகிற 14ம் திகதி அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் தொடங்குகிறது. மார்ச் 29ம் திகதி வரை இந்தப்போட்டி நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் சிறப்பாக செயற்பட்டு வரலாறு படைக்க அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் உலகக்கிண்ணத்தை இலங்கை அணி வெற்றி பெற்றால்130 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.