உலகக் கோப்பை லீக் சம்பியன்ஸிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய அயர்லாந்து அணி 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அவுஸ்ரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடத்துகின்றன. அயர்லாந்து 3வது முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது.
நெதர்லாந்துக்கு எதிராக நேற்று அம்ஸ்டெர்டாமில் நடைபெற்ற போட்டியில் அபாரமாக விளையாடியது அயர்லாந்து. அந்த அணியின் ஜோய்சி 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்போட்டியில் கூடுதல் புள்ளிகளைப் பெற்றதன் அந்த அணி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை டி 20 போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக அயர்லாந்து இடம்பிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.