இலங்கையில் போலி முக நூல் கணக்குகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இணைய மோசடிகள் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 150 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர அழைப்பு பிரிவின் தகவல் தொழில்நுட்ப சிரேஸ்ட பொறியியலாளர் ரோஹான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
போலியான முக நூல் கணக்குகளே அதிகளவான மோசடிகளுக்கான காரணமாக அமைந்துள்ளது. மிரட்டல்கள் பண மோசடி ஏமாற்றல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
முகநூல் கணக்கு ஒன்றை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் போன்ற செயற்பாடுகளின் போது பயனர்கள் மிகுந்த கவனத்தை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது.
குறிப்பாக தங்களது அடையாளத்தை மிகச் சரியான முறையில் உறுதி செய்யக் கூடிய அதாவது போலி கணக்குகள் உருவாக்கப்பட முடியாத வகையில் கணக்குகளை ஆரம்பிக்க வேண்டுமென சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.