வடமாகாண சபையின் பிரேரணைக்கு அரசாங்கம் அதிருப்தி!!

475

Rajitha

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப் படுகொலைகள் தொடர்பில், சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வௌியிட்டுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

யுத்த காலத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், இது குறித்து சர்வதேச விசாரணை அவசியம் எனவும், வடமாகாண சபையில் நேற்று பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது.

எதுஎவ்வாறு இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் சர்வதேசத்தினரால் ஏற்றுக் கொள்ளக் கூடிய உள்நாட்டு விசாரணை ஒன்றை மேற்கொள்வதாக, தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது என, இது குறித்து கருத்து வௌியிட்ட அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வட மாகாணத்தின் இவ்வாறான தீர்மானங்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

-அத தெரன-