உலகக்கிண்ணப் போட்டிகளில் வலிகளை தாங்கிக் கொள்ள தயார் : லசித் மலிங்க!!

414

Malinga

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எத்தகைய வலியையும் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

காயத்தால் அவதிப்பட்டு வந்த மலிங்க கடந்த செப்டெம்பர் மாதம் முதல் போட்டிகளில் ஏதும் கலந்து கொள்ளவில்லை. பல மாத இடைவெளியின் பின்னர் தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத்தில் விளையாடியிருந்தார்.

இந்நிலையில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடர் பற்றி மலிங்க கூறுகையில், எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ணத் தொடரின், முதலாவது போட்டியில் எமது அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கின்றது.

அந்தப் போட்டியில் விளையாடும் அளவிற்கு நான் உடல் தகுதி பெற்றுள்ளேன். என்னால் எவ்வளவு தூரம் வேகமாக பந்து வீச முடியும் என்பது தெரியவில்லை. ஆனால், சீரான முறையில் பந்து வீசி அணிக்கு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.