ஹற்றனில் போதையில் ஒன்றாக இருந்த யுவதியும் ஐந்து இளைஞர்களும் கைது!!(படங்கள்)

901

சிவனொளிபாதமலைக்கு செல்வதாகக்கூறி அட்டன் நகரில் போதை நிலைமையில் இருந்த ஒரு யுவதியையும் ஜந்து இளைஞர்களையும் ஹற்றன் பொலிசார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

மொரட்டுவ அங்குளானையிலிருந்து வந்த இவர்கள் ஹற்றன் நகரில் ஒரு மதுபான நிலையத்தின் அறையில் மேற்படி யுவதி உட்பட ஜந்து ஆண்களும் இவ்வாறு மதுபானம் அருந்தி புகைப்பிடித்து உல்லாசமாக இருந்துள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக ஹற்றன் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கைது செய்துள்ளனர்.

மேற்படி பெண்ணை குறித்த மதுபான நிலையத்திற்கு மறைவாக கொண்டு சென்றதாகவும் இவர்களை கைது செய்யும் வேளையில் இவர்கள் அதிகமான போதை நிலைமையில் இருந்ததாகவும் ஹற்றன் பொலிசார் தெரிவித்தனர்.

சிவனொளிபாதமலை ஒரு புனிததலம் எனவும் அங்கு செல்லும் யாத்திரைகள் போதை நிலைமையில் செல்லக் கூடாது எனவும் மதுபானம் மற்றும் ஏனைய போதை பொருட்களை கொண்டு செல்லுதல் சட்டவிரோதம் எனவும் யாத்திரைகள் அமைதியாக, பக்தியான நிலையில் சிவனொளிபாதமலைக்கு செல்ல வேண்டும் என பொலிசார் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடதக்கது.

கைது செய்த ஜந்து இளைஞர்களையும் ஒரு யுவதியையும் வைத்திய பரிசோதனையின் பின் ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதாக ஹற்றன் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இவர்களை கைது செய்யும் போது கைது செய்ய வேண்டாம் எனவும் இச்சம்பவத்தை மறைக்குமாறும் கைது செய்யப்பட்டவர்கள் வேண்டுக்கோள் விடுத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

1 2 3 4 5 6