வவுனியாவில் RISE அமைப்பால் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!!

865

வவுனியா மணியர்குளம் வித்தியானந்த வித்தியாலய பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கு RISE அமைப்பால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (12.02) காலை 10.00 மணியளவில் பாடசாலை ஆசிரியர் திருமதி.ஜெசிந்தா தெய்வேந்திரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வெங்கலசெட்டிகுல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.இமல்டா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவ் கற்றல் உபகரணங்கள் அமைப்பால் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் வெங்கலசெட்டிகுல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.இமல்டா, பாடசாலை ஆசிரியர்களான திருமதி.ஜெசிந்தா தெய்வேந்திரம், திருமதி.சுகந்தினி செந்தில்நாதன், RISE அமைப்பின் ஆலோசகர் திரு.அ.சிவனேந்திரன், தலைவர் திரு.க.லக்ஷ்மிகாந்த், உபதலைவர் திரு.செ.பிரியங்கன், உபசெயலாளர் திரு.செ.யதார்த்தன், உறுப்பினர்கள் திரு.க.மயூரதன், திரு.ஸ்ரீ.கேசவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

10961811_392562247571480_1740733794_n 10962218_392562367571468_216014054_n 10965292_392562464238125_317786684_n 10965402_392562457571459_967747621_n 10966725_392562240904814_794627322_n 10967051_392562604238111_960838541_n 10968264_392562140904824_1041420448_n 10979391_392561884238183_1270585150_n 10984787_392562584238113_525443865_n 10994754_392562384238133_2043572719_n 10994764_392562447571460_1376571127_n 10951820_392562237571481_17566385_n