மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவின் மேற்கு பகுதியில் உள்ளது வாசா அக்ரோபோங். இங்குள்ள பல் துறை கல்வி வளாகத்தில் ஆசிரியையாக இருப்பவர் கிறிஸ்டியனா ஓவுசு (22).
இவரது வகுப்பில் 2 மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்ய மறந்து விட்டதற்காக ஓவுசு நூதன தண்டனை அளித்து உள்ளார். மாணவர்களை படுக்க வைத்து அவர்கள் மீது ஏறி அவர்களை மிதித்து உள்ளார். முன்னாதாக அவர்களை மிதித்து கீழே தள்ளி உள்ளார்.
இந்த காட்சி பக்கத்து அறையில் இருந்த நபரால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக இணையதளங்களில் வெளியாகி ஆசிரியைக்கு தற்போது பிரச்சினை எழுந்துள்ளது.