21 வயது இளம் தாய் ஒருவரை நடமாடும் விபச்சார சேவையில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதிகள் மூவரை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் ஒற்றர்கள் மூலம் சந்தேகநபர்களும் இளம் தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாடிக்கையாளர்களிடம் 3000 ரூபா பெறும் முச்சக்கர வண்டி சாரதிகள் இளம் தாய்க்கு 1000 ரூபா வழங்குவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று (16.02) தம்புள்ளை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.