நுவரெலியாவில் கடும் பனிப்பொழிவு : 4 பாகை செல்சியஸில் மக்களை வாட்டி வதைக்கும் குளிர்!!

459

Nuwaralia

இன்று காலை நுவரெலியாவில் சில இடங்களில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவினால் 4 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இவ்வாறு காலநிலை காணப்பட்டால் மரக்கறி வகைகளுக்கும் தேயிலை செடிகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளா் தெரிவித்தார்.

கடும் குளிர் காரணமாக பாடசாலை மாணவர்களும் வேலைக்குச் செல்வோரும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.