தமிழில் கொக்கி, திருவண்ணாமலை, தலையெழுத்து போன்ற படங்களில் பூஜா காந்தி நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பூஜா காந்தி பெங்களூரில் உள்ள ஜெயநகர் அருகே காரில் சென்று கொண்டு இருந்தார்.
காரை அவர் வேகமாக ஓடியதாக கூறப்படுகிறது. அப்போது எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்த வர்ஷா சகானி என்ற 55 வயது பெண் மேல் அவரது கார் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் அப்பெண் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். பூஜா காந்தி காரை நிறுத்தாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த பெண்ணை வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து ஜெயநகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது பூஜா காந்தி கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும் போது, பூஜா காந்தியை அவரது வீட்டில் கைது செய்தோம். பெண் மேல் காரில் மோதி விட்டு உடனே அவர் தலைமறைவாகி விட்டதால் விபத்து குறித்து போலீசுக்கு தெரிய படுத்தாமல் அவர் மறைந்தது குற்றமாகும். பூஜா காந்தியிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெறப்பட்டு உள்ளது என்றனர்.