வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக்கு சென்ற பஸ் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக்கு இன்று காலை சென்ற குறித்த பஸ் புளியங்குளம் – நெடுங்கேணி வீதியில் நையினமடுவுக்கு அருகில் மரம் ஒன்றுடன் மோதியுள்ளது.
இவ் விபத்தில் பேருந்து பெரும் சேதத்திற்கு உள்ளாகிய போதிலும் பயணிகள் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளனர்.
நேற்று சிவராத்திரி தினமாகையால் திருகேதீஸ்வரம் ஆலயத்திற்கான சேவையில் ஈடுபட்டு, இன்று காலை தமது வழமையான சேவையில் சாரதி ஈடுபட்ட போது, தூக்கக் கலக்கம் காரணமாகவே இவ் விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.