வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் அயலவர் தமது காணியை துப்பரவு செய்வதற்காக வைத்த தீயினால் அப்பகுதியில் இருந்த வீடு முற்றாக எரிந்த சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றது.
இச் சம்பவத்தினால் பாடசாலை மாணவர்களது கற்றல் உபகரணங்கள் உட்பட வீட்டின் அனைத்து பொருட்களும் தீயில் முற்றாக எரிந்து எரிந்து நாசமாகியுள்ளன.
இந் நிலையில் குறித்த வீட்டு உாிமையாளரான துரைராசா அகிலனுக்கு உரித்துடைய ஒரு பரப்பு தாழ்நிலக்காணி இருப்பதாகவும் தற்காலிக வீடு ஒன்றினை அமைப்பதற்கும், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையைத் தொடா்ந்து மேற்கொள்ள உதவிகளை எதிா்பாா்ப்பதாகவும் தொிவித்துள்ளாா்.
அத்துடன் தனது கல்வி நடவடிக்கையைத் தொடா்ந்து மேற்கொள்ள தனக்கு உதவுமாறு மகளான 10 வயதுடைய பாடசாலை மாணவியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே மேற்படி சம்பவம் தொடா்பில் குறித்த குறித்த குடும்பத்தினருக்கு உதவிகளை வழங்க விரும்புவோா் பின்வரும் வங்கிக்கணக்கில் பணவைப்பு மேற்கொள்ளலாம் என தொிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு விவரம்:
அகிலன் லதாமினி
Commercial Bank – Vavuniya
A/C: 8610028746