ஒரே நேரத்தில் மூன்று சூரியோதயங்களால் பரபரப்பான மக்கள்!!

428

Sun

கீழ் வானத்தில் ஏற்பட்ட ஒளியின் மாயை காரணமாக ரஷ்யாவின் நகரொன்றில் இருக்கும் மக்கள் ஒரே நேரத்தில் மூன்று சூரியோதயங்களை பார்வையிட்டுள்ளனர்.

ரஷ்யாவின் மேற்கு நகரான செலியாபிஸ்கில் இவ்வாறு அடிவானத்தில் ஒரே நேரத்தில் மூன்று சூரியோதங்கள் ஏற்பட்டதை அங்குள்ள பலரும் படம்பிடித்து சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

வானில் ஏற்பட்ட பனிக்கட்டி படிகங்கள் உருவாக்கும் ஒளி வட்டத்தில் சூரிய ஒளி பட்டுத் தெரித்த நிலையிலேயே இவ்வாறு காட்சி அளித்திருப்பதாக உள்ளுர் வானியல் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படிகங்களை தட்பவெப்பநிலை சுமார் -24 பாகையை எட்டு குளிரான காலை வேளையில் வெறுங்கண்ணால் பார்க்க முடியுமாக இருக்கும் என்று பிராந்திய வானிலை மையத்தின் தலைவர் கெலினா ஹெபொரென்கா குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னரும் குறித்த நகரில் நீல நிறமான பனி மூடியிருந்ததை அங்கிருக்கும் மக்கள் கண்டுள்ளனர்.

இந்த பனிமூட்டம் குறித்து ஊர்மக்கள் அச்சமடைந்த நிலையில், தொழிற்சாலை ஒன்றில் பயன்படுத்திய நிறச்சாயமே இவ்வாறு காற்றில் கலந்திருப்பது பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.

சைபீரியா பகுதிக்கு வாயிலாக அமைந்திருக்கும் இந்த செலியாபிஸ்கி நகர் இவ்வாறான அசாதாரண நிகழ்வுகளுக்கு பழகிப்போயுள்ளது. இந்த நகரில் தான் 2013ஆம் ஆண்டு 570 கிலோகிராம் விண்கல் ஒன்று விழுந்து 900க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.