வவுனியாவில் சாந்தநாயகி நற்பணி மன்றத்தால் வறிய குடும்பத்துக்கு பசுமாடு வழங்கி வைப்பு!!(படங்கள்)

515

வவுனியா மறவன்குளத்தைச்சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஜேசுராசா புற்றுநோயால் 23.01.2015 அன்று மரணமடைந்து விட அவரது மனைவி யேசுராசா மலர்ச்செல்வி (37),பிள்ளைகளான யேசுதாந்தன் (15),சுதர்சன் (13),சுதர்சினி (8),நிதர்சன் (4)உதவிகள் ஏதும் இன்றி மிக வறுமைப்பட்டு போனார்கள் .

இவர்கள் தமது குடும்ப நிலையை கருதி தமக்கு ஒரு பசுமாடு வழங்கி தமது வாழ்வாதாரத்தை உயர்த்த யாரேனும் உதவ வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரிடம் கேட்டு கொண்டதன் பிரகாரம் இவர்கள் படும் துயரத்தை கேள்விபட்டு தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பு, சாந்தநாயகி நற்பணி மன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததன் பிரகாரம் சாந்தநாயகி நற்பணி மன்றத்தால், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் ஊடாக 6மாத சினையுடைய பசு மாடும், கல்வி கற்க்கும் 3 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும் நேற்று (19.02) வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமூக ஆர்வலர் மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

DSCN4483 DSCN4484 DSCN4487 DSCN4488 DSCN4490 DSCN4491 DSCN4498 DSCN4499 DSCN4500 SAM_0833