வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை-2014இல் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு!!(படங்கள்)

661

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா பாடசாலை அதிபர் திரு.க.தனபாலசிங்கம் தலைமையில் நேற்று(23.02) பாடசாலை பிராதான மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் கௌரவ
றிஷாட் பதியூதீன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி அ.சுவேந்திரன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர் வலயக் கல்வி அலுவலகம்) அவர்களும், திரு.I.S.M மொகைதீன் (நிறைவேற்றுப் பணிப்பாளர் இரசாயனக் கூட்டுத்தாபனம் பரந்தன்) அவர்களும்,

கௌரவ விருந்தினராக திருமதி.R.J.சுஜனிதா (கிராம சேவையாளர் -பண்டாரிகுளம்) அவர்களும் கலந்து கொண்டு சித்தி பெற்ற  86 மாணவர்களையும் பாராட்டி கௌரவித்தனர்.

-பாஸ்கரன் கதீசன்-

2 03 3 4 5 6 7